Published : 06 May 2021 03:14 AM
Last Updated : 06 May 2021 03:14 AM

கரோனா தடுப்பு விதிகள் குமரி ஆட்சியர் அறிவுறுத்தல் :

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இன்று முதல் வரும் 20-ம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள் அமலாகின்றன.

அதன்படி மளிகை மற்றும் காய்கறி கடைகள் திங்கள் முதல்சனிக்கிழமை வரை மதியம் 12 மணி வரையே அனு மதிக்கப்படும். இறைச்சி, மீன் கடைகள் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் வரை மட்டுமே அனுமதிக்கப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமை முழுமையாக மூடப்படும். டீ கடைகள், உணவக ங்களில் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும்.

மருந்தகம், பால் விநியோகம் போன்ற அத்தியாவசிய பணிகள் தங்கு தடையின்றி நடைபெறும். கலாச்சார, அரசியல், விளையாட்டு நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடை பிடிப்பதுடன், முகக்கவசங்களை மக்கள் கட்டாயம் அணிய வேண்டும். குமரியில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் புதிய கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவற்றை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x