Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

அனைத்து ஊடக ஊழியர்களுக்கும் - முன்களப் பணியாளருக்கான உரிமைகள், சலுகைகள் : மு.க.ஸ்டாலின் உறுதி

செய்தித்தாள், காட்சி, ஒலி ஊடகங்களில் பணியாற்றும் அனைவருக்கும் முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகள், சலுகைகள் வழங்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மகத்தான மக்களாட்சியின் மாண்புக்கு நான்காவது தூணாய்விளங்குவது ஊடகத் துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாயப் பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதற்காக அயராது உழைக் கின்றன.

கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப்பணியாளர்களாக தமிழகத்தில் கருதப்படுவார்கள். செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வரும் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகள், சலுகைகள் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x