Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

8 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு :

திருநெல்வேலி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றுசென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

விதர்பா முதல் கேரளா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ஈரோடு, திருப்பூர், தருமபுரி, சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 6-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும், 7-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.

கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை 4 முதல் 5 டிகிரி பாரன்ஹீட்வரை அதிகமாக உணரப்படும். இதனால் அதிகமாக வியர்க்கும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x