Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

ஆக்சிஜன் இருப்பை அதிகப்படுத்த போர்க்கால நடவடிக்கை : மாவட்ட ஆட்சியரிடம் கோவை எம்.பி வலியுறுத்தல்

கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்துவிட்டு திரும்பிய கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டோர்.

கோவை

கோவை மாவட்டத்தில் ஆக்சிஜன் இருப்பை அதிகப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரை நேரில் சந்தித்து, கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது,‘‘ மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், அரசுமருத்துவமனையில் ஆக்சிஜன் போதியகையிருப்பு இருப்பதாகவும், இஎஸ்ஐமருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பற்றாக்குறை இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. மருத்துவர் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் படுக்கைகள், ஆக்சிஐன் வசதி கொண்ட படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் போர்க்கால அடிப்படையில் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலரின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளேன்.

தடாகம் செங்கல்சூளைகள் விவகாரத்தில் நீதிமன்றம் கடந்த 30-ம் தேதி சிலவழிகாட்டுதல்களை கொடுத்து இருக்கின்றது. நீதிமன்ற உத்தரவு நகல்களை ஆட்சியரிடம் கொடுத்துள்ளோம். ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினை என்பதால் நீதிமன்ற வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள் ளோம்’’ என்றார்.

திமுக கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.கேசவமணி, சிஐடியு மாவட்ட நிர்வாகி என்.செல்வராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x