Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

பல்லடம் அருகே காஸ் கசிந்து தீ விபத்து :

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரடிவாவி இந்திரா நகர் ஏடி காலனி நடுவீதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (60). இவரது மனைவி கருணையம்மாள் (55). கூலி வேலை செய்து தம்பதி வாழ்ந்து வருகின்றனர். வழக்கம்போல நேற்று பழனிசாமி வேலைக்கு சென்றுள்ளார். கூலி வேலைக்கு சென்றுவிட்டு, கருணையம்மாள் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டுக்குள் இருந்து கருகிய வாசம் வருவதை உணர்ந்த அவர், மகன் ராஜூவுக்கு தகவல் அளித்துள்ளார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில் பல்லடம் தீயணைப்புத் துறையினர் சென்று தீயை அணைத்தனர். சிலிண்டருக்கும் அடுப்புக்கும் இடையே உள்ள பாலித்தீன் குழாய் பழுதடைந்து, இந்த தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். வீட்டில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து சேதமாகின. வங்கி புத்தகம், ஆதார் அட்டை, காப்பீடு பத்திரம், வீட்டுமனைப் பட்டா ஆகியவை எரிந்துவிட்டன. இதுதொடர்பாக பல்லடம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x