Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

சாக்கடை கட்டுமான பணியில் தரமில்லை : மாநகராட்சி மீது புகார் :

திருப்பூர் மாநகராட்சி 30-வது வார்டு போயம்பாளையம் ராஜா நகரில் மாநகராட்சி நிர்வாகம் சாக்கடைக் கால்வாய் கட்டி வருகிறது. இதில், சாலையின் ஒருபுறம் பணி முடிந்து, மறுபுறம் பணி நடைபெற்று வந்தது. அதில் தளம் அமைக்கப்பட்டு, சாக்கடை கட்டும் பணி நடைபெறுகிறது. இதில் ஒருபக்க சுவர் 3 அங்குலம் மட்டும் கட்டினார்கள். தரம் இல்லாமல் கட்டுமானப்பணி நடைபெறுவதாக பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்தது.

தொட்டிபாளையம் முன்னாள் ஊராட்சிதலைவர் மோகன், மாநகராட்சி அலுவலர்களிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து பணிகள் நிறுத்தப்பட்டன. மாநகராட்சி 2-வது மண்டல உதவி ஆணையர் செல்வநாயகம், இளநிலை பொறியாளர் சுப்பிரமணி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு உரிய தரத்துடன் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x