Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

பெண்கள், குழந்தைகள், முதியோருக்கு எதிரான - குடும்ப வன்முறை புகார்களுக்கு அவசர உதவி எண் : சட்டப் பணிகள் ஆணைக் குழு அறிவிப்பு

கோவை

பெண்கள், குழந்தைகள், முதியோருக்கு எதிரான குடும்ப வன்முறை புகார்களை தெரிவிக்க அவசர உதவி எண்களை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு அறிவித் துள்ளது.

இதுதொடர்பாக கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஆர்.சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குடும்ப வன்முறைகள், முதியோர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக சட்ட உதவிகள் வழங்குவதற்கு மாவட்ட சமூக நலத்துறையுடன் இணைந்து அவசரஉதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இலவச சட்ட உதவிக்கு கோவை சட்டப் பணிகள்ஆணைக்குழுவின் 0422-2200009 என்ற எண்ணிலும், பெண்கள், குழந்தைகள், முதியோருக்கு எதிரான குடும்ப வன்முறை புகார்களுக்கு மாவட்ட சமூக நலத் துறை ஒருங்கிணைப்பாளர்களை 8754152417, 9025293938 என்ற எண்களிலும் தொடர்புகொள்ளலாம்.

இலவச சட்ட உதவி தேவைப்படுவோர் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உதவி எண்களில் தொடர்புகொள்ளலாம். சட்டஉதவிகோரி மனு அளிக்க உள்ளவர்கள் நேரில் வருவதை தவிர்க்கும் வகையில், தங்கள் மனுவை dlsacoimbatore@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். அவ்வாறு மின்னஞ்சல் வழியாக அனுப்ப இயலாதவர்கள் தங்கள் மனுவை ‘செயலாளர், கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், கோவை-641018’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x