Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM
ஓசூர் வட்டத்தில் நேற்று குளிர்ந்த காற்று வீசி இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் நகரப்பகுதி குளிர்ச்சியான தட்பவெட்ப நிலைக்கு மாறியது.
ஓசூர் பகுதியில் கோடைகாலத்தில் கடந்த இரண்டு வார காலமாக வானில் கார்மேகம் திரண்டு குளிர்ந்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் மழை பெய்கிறது. தொடர்ந்து நேற்று காலை கோடையில் வழக்கமான வெயில் சுட்டெரித்தது. பிற்பகல் 3 மணிக்கு மேல் வானில் கார் மேகம் திரண்டு, மழை வரும் அறிகுறியாக குளிர்ந்த காற்று வீசியது.
பின்பு மாலை 4 மணியளவில் இடி, மின்னலுடன் மழை பெய்யத்தொடங்கியது. அதேபோல மத்திகிரி, தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், உரிகம், அஞ்செட்டி, பாகலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழை பெய்தது. கோடை மழையினால் ஓசூர் நகரப்பகுதி குளிர்ச்சியான தட்பவெட்ப நிலைக்கு மாறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT