Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

12 ரயில் சேவைகள் நாளை முதல் ரத்து :

பயணிகள் வருகை குறைவால், நாளை முதல் 15-ம் தேதி வரை 12 சிறப்பு ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக, வெளியூர்களுக்கு பயணம் செல்பவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் குறைந்து வருகிறது. இதன் காரணமாக, 12 சிறப்பு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, திருச்சி - திருவனந்தபுரம் விரைவு ரயில் (வண்டி எண்.02627/28), கோயம்புத்தூர் - கண்ணூர் சிறப்பு ரயில் (06607/08), புனலூர்-குருவாயூர் விரைவு ரயில் (06327/38) உள்ளிட்ட 12 சிறப்பு ரயில்களின் சேவை நாளை (6ம் தேதி) முதல் வரும் 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x