Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

கரோனாவால் பாதிக்கப்படும் - வங்கி ஊழியர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரிக்கை :

சென்னை

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் மத்திய அரசு மற்றும் சில மாநில அரசு ஊழியர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படுகிறது. கரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணிபுரியும் வங்கி ஊழியர்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் ரூ.50 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் வங்கி ஊழியர்களுக்கு, காப்பீட்டு நிறுவனங்கள் அவர்கள் பெறும் சிகிச்சைக்கான காப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும்.

வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் வங்கிகளுக்கு நேரில் வந்து பணிபுரியவும், எஞ்சியவர்களை வீட்டில் இருந்து பணிபுரியவும் அனுமதிக்க வேண்டும். இதன் மூலம், ஊழியர்கள் கரோனா தொற்றால் பாதிப்படைவது குறையும். இவ்வாறு வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x