Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

புதுச்சேரி சுகாதாரத்துறையில் - 14 சிறப்பு மருத்துவ நிபுணர்கள் இடமாற்றம் :

புதுச்சேரி சுகாதாரத்துறையின் கீழ் பணியாற்றி வரும் சிறப்பு மருத்துவ நிபுணர்கள், மருத்துவ அதிகாரிகள் என 14பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் சித்ரா ராஜீவ் காந்தி மகப்பேறு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ சிகிச்சை நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காசநோய் தடுப்பு திட்ட அதிகாரியாகவும், கூடுதல் பொறுப்பாக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநராகவும் பணியாற்றிய மருத்துவர் கோவிந்தராஜன் கோரிமேடு மார்பு நோய் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காசநோய் தடுப்பு திட்ட அதிகாரி பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

கோரிமேடு மார்பு நோய் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் செல்வம் அதே மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ சிகிச்சை நிபுணராகவும், ராஜீவ் காந்தி மகப்பேறு மருத்துவமனையில் இருந்த மருத்துவர் ராஜாம்பாள் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநராகவும், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரியாக இருந்த முரளி துணைஇயக்குநராகவும் (பொதுசுகாதாரம்) நியமிக்கப்பட்டுஉள்ளார்.

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை மருத்துவர் உதயகுமார் ராஜீவ் காந்தி மகப்பேறு மருத்துவமனையில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரியாகவும், மருத்துவர் ஆனந்தலட்சுமி துணை இயக்குநராகவும் (குடும்ப நலம்), காலாப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய முதன்மை மருத்துவ அதிகாரி முருகன் துணை இயக்குநராகவும் (தடுப்புப்பூசி திட்டம்) நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒதியஞ்சாலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி (பொறுப்பு) பக்கா வெங்கடேஸ்வரலு உதவி இயக்குநராவும் (பைலேரியா), பாகூர் ஆரம்ப சுகாதார நிலைய முதன்மை மருத்துவ அதிகாரி உமாசங்கர் உதவி இயக்குநராகவும் (தொழுநோய்), கூடுதல் பொறுப்பாக மகாத்மா காந்தி தொழுநோய் மருத்துவமனை மருத்துவ அதிகாரியாகவும், உதவி இயக்குநர் (தொழுநோய்) ஆனந்தன் ஏனாம் அரசு பொது மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அன்னை தெரசா பட்டமேற்படிப்பு மற்றும் சுகாதார அறிவியல் ஆராய்ச்சிநிறுவனத்தின் புலமுதன்மையர் மருத்துவர் ஜெயந்திக்கு கூடுதல் பொறுப்பாக இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹேமியோபதித் துறை இயக்குநர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ சிகிச்சை நிபுணராக பணியாற்றிய மேரி ஜோசப் ஸ்டான்லி அம்ரோஸ் அதே மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான ஆணையை ஆளுநர் உத்தரவின் பேரில் சார்புச் செயலர் (சுகாதாரம்) புனிதமேரி பிறப்பித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x