Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM
கரோனா பரிசோதனை என்றபெயரில் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் கூட்டமாக கூட வேண்டாம் என புதுச்சேரிசுகாதாரத் துறை அறிவுறுத்திஉள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசுமருத்துவமனையிலும் கரோனா நோய்க்கான உமிழ்நீர் பரிசோதனை தினம் எடுக்கப்பட்டு வருகின்றது.
அப்படி எடுக்கப்படும் ஆர்டிபிசிஆர் மாதிரிகள் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஜிப்மர் மற்றும் விசிஆர்சிக்கு (நோய் கட்டுப்பாடு ஆய்வு மையம்) அனுப்பப்பட்டு முடிவுகள் பெறப்படுகின்றன.
மேற்கண்ட முடிவுகள் நோயாளிகளுக்கு செல்போன் மூலமாகவும், சுகாதாரத் துறை களப்பணியாளர்கள் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதனால் பொதுமக்கள் நோய் அறிகுறிகள் இருந்தால், அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி உமிழ்நீர் பரிசோதனை செய்து கொள்ளலாம். தேவையின்றி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று, பரிசோதனைக்காக கூட்டத்தில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT