Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம், புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி ஒப்படைத்தார்.
புதுச்சேரி மாநிலத்தில், 15 வது சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து 30 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், தொகுதி வாரியாக வெற்றி பெற்றவர்களின் பெயர் பட்டியல் புதுச்சேரி மாநில அரசிதழில் நேற்று முன்தினம் (3-ம் தேதி) வெளியிடப்பட்டது.
இதையடுத்து, புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி சுர்பிர் சிங் மற்றும் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி குமார் ஆகியோர் நேற்று புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்குச் சென்று, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து, புதுச்சேரி மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை ஒப்படைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT