Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM
இந்நிலையில் பூஜை அறையில் இருந்த 10 பவுன் கொண்ட இரு சங்கிலிகள், ஒரு பவுன் மோதிரம் ஆகியவை கடந்த ஏப். 29-ல் திருடு போனது. இதுகுறித்து புகாரின்பேரில், திருமங்கலம் நகர் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் வீட்டில் வண்ணம் பூசியபோது புஷ்பராஜ் 11 பவுன் நகையைத் திருடியது தெரியவந்தது. அவரைக் கைது செய்து நகையை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மதுரை சம்மட்டிபுரத்தைச் சேர்ந்தவர் செல்வி (59). இவர் கடந்த 3-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார். சிறிதுநேரம் கழித்து திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 12 பவுன் நகைகள், அரை பவுன் வளையல், ரூ. 2 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து புகாரின்பேரில் எஸ்.எஸ். காலனி போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT