Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

திருச்சி-திருவனந்தபுரம், நாகர்கோவில்- பெங்களூரு சிறப்பு ரயில்கள் ரத்து :

மதுரை: பயணிகள் ஆதரவு இல்லாததால் மதுரை வழியாக இயக்கப்படும் திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி, நாகர்கோவில்-பெங்களூரு சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன‌.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருச்சியில் இருந்து தினமும் காலை 7.15 மணிக்குப் புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண் 02627), திருவனந்தபுரத்தில் இருந்து முற்பகல் 11.35-க்குப் புறப்பட்டு திருச்சி செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண் 02628) ஆகியவை மே 6 முதல் 15 வரை ரத்து செய்யப்படுகிறது.

பெங்களூருவில் இருந்து தினமும் மாலை 5 மணிக்குப் புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண் 07235) மே 5 முதல் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து தினமும் இரவு 7.10 மணிக்குப் புறப்பட்டு பெங்களூரு செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண் 07236) மே 6 முதல் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x