Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

கான்கிரீட் முட்டு மரங்கள், கம்பி சரிந்ததில் ஒருவர் உயிரிழப்பு, 5 பேர் காயம் :

நாமக்கல்: பரமத்தி வேலூர் அருகே கோயில் திருப்பணியின் போது கான்கிரீட் தளம் போட அமைக்கப்பட்டிருந்த முட்டு மரங்கள், கம்பிகள் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தார். படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பரமத்தி வேலூர் அருகே சின்னமருதூா் காலனி பகுதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. கோயிலின் முன் மண்டபம் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இப்பணியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, கான்கிரீட் தளம் அமைப்பதற்காக அமைக்கப்பட்ட முட்டுக் மரங்களில் லேசான அசைவு ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட தொழிலாளா்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிா்பாராதவிதமாக முட்டு மரங்கள், கம்பிகள் சரிந்து விழுந்தன. இதில் பரமத்தி வேலூரை அடுத்த கொந்தளத்தைச் சோ்ந்த விஜயகுமாா் (24) சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த 5 போ் பரமத்தி வேலூா் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடா்பாக ஜேடர்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x