Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM
நாமக்கல்: மே தினம், சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனைப் பயன்படுத்தி மொத்தமாக மதுபான பாட்டில்களை சிலர் வாங்கி மோகனூர் பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.
இதன்பேரில் மோகனூர் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். மோகனூர் காவிரி ஆற்றங்கரை சுடுகாடு அருகே செல்வகுமார், மேலப்பேட்டபாளையம் காவிரி ஆற்றின் அருகே முருகானந்தம், வள்ளியம்மன் கோயில் அருகே பிரகாஷ் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. 4 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 231 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT