Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM
கிருஷ்ணகிரி அணை நீர்மட்டம் நேற்று 39.10 அடியாக சரிந்தது.
தென்பெண்ணை ஆற்று பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும், கெலவரப்பள்ளி அணையில் இருந்து நீர் திறப்பு குறைந்ததாலும் கிருஷ்ணகிரி அணைக்கு நீர் வரத்து கடந்த 1-ம் தேதி முதல் முற்றிலும் நின்றது. அணையில் இருந்து கால்வாய்கள் வழியாக விநாடிக்கு 12 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 39.10 அடிக்கு தண்ணீர் இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT