Published : 05 May 2021 03:14 AM
Last Updated : 05 May 2021 03:14 AM
அரியலூர்: பெரம்பலூர் மாவட்டம் வடக்கு மாதவி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி சோபனா(25), மகன் கனிஷ்(2). இருவரும், உறவினர் பாண்டியராஜன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக அரியலூரை அடுத்த கோப்பிலியன்குடிகாடு கிராமத்துக்கு சென்று விட்டு, நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
அரியலூர்- கோப்பிலியன்குடிகாடு சாலையில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், சோபனா அந்த இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கனிஷ் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கயர்லாபாத் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT