Published : 05 May 2021 03:14 AM
Last Updated : 05 May 2021 03:14 AM

திருவாரூரில் சைபர் கிரைம் காவல் நிலையம் திறப்பு :

திருவாரூர்: திருவாரூரில் சைபர் கிரைம் காவல் நிலைய திறப்பு விழா எஸ்.பி கயல்விழி தலைமையில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மன்னார்குடியைச் சேர்ந்த முகிலன்பாலா என்பவர், இணையதளம் வழியாக பண மோசடி செய்யப்பட்டதாக அளித்த புகாரின்பேரில், முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதன் நகலை முகிலன் பாலாவிடம், எஸ்.பி கயல்விழி வழங்கினார்.

பின்னர் எஸ்.பி கூறும்போது, ‘‘சைபர் குற்றங்கள் தொடர்பான புகார் மனுக்களை பொதுமக்கள், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நேரடியாகவோ, அல்லது https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage என்ற லிங்க்கை பயன்படுத்தியோ அல்லது NCRP:https:\\cybercrime.gov.in\ என்ற லிங்க்கை பயன்படுத்தியோ அளிக்கலாம். மனுக்கள் மீது உடனடியாக விசாரணை செய்து, குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x