Published : 05 May 2021 03:14 AM
Last Updated : 05 May 2021 03:14 AM

தோவாளையில் போராட்டம் :

தோவாளை அருகே குளத்துவிளை பகுதியில் கடந்த சில நாட்களாக வீடுகளில் மின்தடை ஏற்பட்டு வருவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் திருட்டு சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

இது தொடர்பாக குளத்துவிளை பகுதி மக்கள் தோவாளைமின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை தீர்வு காணப்படவில்லை.

இதையடுத்து சீரான மின் விநியோகம் கோரி அப்பகுதி மக்கள் தோவாளை ஒன்றிய பாஜக தலைவர் கிருஷ்ணன் தலைமையில் தோவாளை மின்வாரிய அலுவலகம் முன் திரண்டு போராட்டம் நடத்தினர்.

தோவாளை ஊராட்சிமன்றத் தலைவர் நெடுஞ்செழியன், துணைத் தலைவர் தாணு உட்பட திரளானோர் கலந்துகொண்டனர். மின்வாரியப் பொறியாளர்கள் அங்கு வந்து, இரவுக்குள் மின்தடை பிரச்சினை சீரமைக்கப்படும் என அவர்களிடம் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x