Published : 05 May 2021 03:14 AM
Last Updated : 05 May 2021 03:14 AM
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது விட்டு விட்டு கோடை மழை பெய்து வருகிறது. நேற்றுஅதிகபட்சமாக குருந்தன்கோட்டில் 31 மிமீ., மழை பதிவானது. பெருஞ்சாணியில் 18 மிமீ., புத்தன்அணையில் 17, நாகர்கோவிலில் 7, குளச்சலில் 24, கோழிப்போர்விளையில் 28, முக்கடல் அணையில் 8 மிமீ., மழை பெய்திருந்தது.
மலையோரங்களில் பெய்து வரும் மழையால் பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 153 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர்மட்டம் 41 அடியாக உயர்ந்துள்ளது. பெருஞ்சாணி அணையில் நீர்மட்டம் 54 அடியாகவும், சிற்றாறு1 அணையில் நீர்மட்டம் 5.90 அடியாகவும் உள்ளது.
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் 25 அடி உச்சநீர் மட்டம்கொண்ட முக்கடல் அணையில் நீர்மட்டம் 1 அடியாக குறைந்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் மற்றும்சுற்றுப்புறப் பகுதிகளுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகிக்கும் வகையில் நடந்து வரும் புத்தன்அணை திட்ட பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
இத்திட்டம் முழுமை பெற்று பயன்பாட்டுக்கு வர மேலும் சில மாதங்கள் ஆகும் என தெரிகிறது. இதனால் கடந்த ஆண்டுகளைப் போல் நாகர்கோவிலில் கடும் குடிநீர்தட்டுப்பாடை எதிர்கொள்ளும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT