Published : 05 May 2021 03:14 AM
Last Updated : 05 May 2021 03:14 AM

சாலை விபத்தில் மாணவி உயிரிழப்பு :

திருப்பத்தூரில் இரு சக்கர வாகனம் மீது சிமென்ட் லாரி மோதியதில் பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பத்தூர் வீட்டு வசதி வாரியம் பகுதி 2-ல் உள்ள மின்நகர் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி (40). இவரது மகள் அட்சயா (15). இவர், அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இரு சக்கர வாகனத்தில் திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி சாலை வழியாக அட்சயா சென்றார்.

அப்போது, திருப்பத்தூரில் இருந்து ஓசூர் நோக்கி சிமென்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற கனரக லாரி ஒன்று இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அட்சயா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x