Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

தடுப்பூசி பற்றாக்குறை ஜூலை வரை தொடரும் :

கடந்த சில நாட்களாக தினசரி தொற்றுஎண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்து4 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இத்தகைய சூழலில் ஜூலை மாதத்திற்குப் பிறகுதான் தடுப்பூசி உற்பத்தி மாதத்துக்கு 60-70 மில்லியன் என்பதிலிருந்து 100 மில்லியன் அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும், அதுவரை தடுப்பூசி பற்றாக்குறை தொடரும் என்றும் சீரம் நிறுவனத்தின் சிஇஓ ஆதர் பூனவல்லா கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, "கடந்த ஜனவரி மாதத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்துகொண்டிருந்தபோது இந்த அளவுக்குத் தீவிரமாக கரோனா பரவும்என்று அதிகாரிகளே கூட எதிர்பார்க்கவில்லை. இந்தியாவில் கரோனா பாதிப்பின் தீவிர அலை ஆரம்பித்திருக்கிறது என்பதை எல்லோரும் உணரதொடங்கியிருக்கிறார்கள். பல மாநிலங்களில் ஊரடங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x