Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

நாட்டில் 3.68 லட்சம் பேருக்கு ஒரே நாளில் கரோனா வைரஸ் தொற்று :

புதுடெல்லி: கடந்த ஏப்ரல் இறுதி முதல் இந்தியாவில் நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. கடந்த 1-ம் தேதி முதல் முறையாக தினசரி தொற்று 4 லட்சத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது. கடந்த 2-ம் தேதி 3.92 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி நாடு முழுவதும் ஒரே நாளில் 3,68,147 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.99 கோடியாக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 3,00,732 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களையும் சேர்த்து இதுவரை 1,62,93,003 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். நாடு முழுவதும் 34,13,642 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 3,417 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x