Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM
ரயில் பயணிகளின் வசதிக்காக, தற்போது உள்ள பெட்டிகளை மாற்றிவிட்டு, புதிதாக தயாரிக்கப்படும் நவீன வசதிகளுடன் கூடிய எல்எச்பி பெட்டிகளை ரயில்வே இணைத்து வருகிறது. இந்த பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது. அதிர்வுகள் இல்லாமல், பாதுகாப்பாகவும் வேகமாகவும் செல்லும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் சொகுசு இருக்கைகள், செல்போன் சார்ஜிங் வசதி உட்பட பல்வேறு வசதிகள் உள்ளன. எல்எச்பி சாதாரண பெட்டிகளில் 80 படுக்கைகளும், ஏசி பெட்டியில் 72 படுக்கைகளும் உள்ளன.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் - மும்பை லோக்மானிய திலக் சிறப்பு ரயில்களில் (02163/02164) எல்எச்பி பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகின்றன. இன்று முதல் மும்பையில் இருந்தும், நாளை முதல் சென்ட்ரலில் இருந்தும் புறப்படும் லோக்மானிய திலக் சிறப்பு ரயிலில் எல்எச்பி ரயில் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT