Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

176 வாகனங்கள் பறிமுதல் :

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் தேவையின்றி இயக்கப்பட்ட 6 கார்கள், 170 மோட்டார் சைக்கிள் என மொத்தம் 176வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் முகக்கவசம் அணியாத 96 நபர்கள் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 9 நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா எச்சரித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x