Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM
புதுச்சேரியில் தேவைப்படும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலர் அருண் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில் அரசு மற்றும்தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்குத் தேவையான 2,000 குப்பிகள் ரெம்டெசிவர் ஊசி மருந்து புதுச்சேரி அரசினால் புதிதாக அண்மையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இவை, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்டு, உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தேவையான அளவு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக உள்ள நோயாளிகளுக்கு தேவையான ரெம்டெசிவர் உள்பட எந்த மருந்துகளுக்கும் எந்தவித தட்டுப்பாடும் இல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT