Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

கடலூர் மாவட்டத்தில் - 381 பேருக்கு கரோனா தொற்று :

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் நேற்று 381 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுவரையில் இம்மாவட்டத்தில் 31.225 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 240 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதுவரை 28,935 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1678 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 329 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 396 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று வரை 20,038 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 17,579 பேர்சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,334 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 125 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 127 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நேற்று வரை12,898 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 12,060பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 725 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒருவர் உயிரிழந்தது உட்பட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 113 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x