Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

திருப்பத்தூர் தொகுதியில் - திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் 4-வது முறையாக வெற்றி :

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துள்ளார் திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.ஆர்.பெரிய கருப்பன்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், அதிமுக சார்பில் மாநில செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ் ஆகியோருக்கு இடையே நேரடி போட்டி நில வியது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த வாக்கு எண்ணிக்கை யின்போது தனது முகவர்களுடன் பெரியகருப்பன் மையத்துக்கு வந்து பார்வையிட்டார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பெரியகருப்பன் முன்னிலையில் இருந்து வந்தார். இறுதியில் கே.ஆர்.பெரியக ருப்பன் 1,03,682 வாக்குகளும், மருது அழகுராஜ் 66,308 வாக்குகளும் பெற்றனர். வாக்கு வித்தியாசம் 37,374.

திருப்பத்தூர் தொகுதியில் 2006, 2011, 2016 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்ற கே.ஆர்.பெரியகருப்பன், தற்போது 4-வது முறையாக வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x