Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

கரூர் தாந்தோணிமலை கோயிலில் - திமுகவினர் 106 பேர் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் :

கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தாந்தோணிமலை வெங்கடரமண சுவாமி கோயிலில் திமுகவினர் 106 பேர் நேற்று மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி உட்பட மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக்கொண்டு, கரூர் நகராட்சி 43-வது வார்டு திமுக வட்டச் செயலாளர் அம்பிகாபதி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் தனபால் ஆகியோர், தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் அண்மையில் முடி இறக்கி காணிக்கை செலுத்தினர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சியைப் பிடித்தது. மேலும், கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் செந்தில் பாலாஜி உட்பட திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

இதைத் தொடர்ந்து, அம்பிகாபதி, தனபால் ஆகியோர் முன் னிலையில் திமுக தொண்டர்கள் 106 பேர் கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் நேற்று முடி இறக்கி காணிக்கை செலுத்தினர். பின்னர், செந்தில்பாலாஜியை சந்தித்து, அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x