Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM
அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் திமுக சார்பில் க.சொ.க.கண்ணன், அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் போட்டியிட்டனர்.
அரியலூரை அடுத்த கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்ட நிலையில், முதல் 3 சுற்றுகளில் பாமக வேட்பாளர் கே.பாலு முன்னிலை வகித்தார். 4-வது சுற்று முதல் 12-வது சுற்று வரை திமுக வேட்பாளர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார். பின்னர், 13-வது சுற்று முதல் 15-வது சுற்று வரை பாமக வேட்பாளர் கே.பாலுவும், 16-வது சுற்று முதல் 27-வது சுற்றுவரை திமுக வேட்பாளர் க.சொ.க.கண்ணனும் முன்னிலை பெற்றனர். இறுதியில், 5,452 வாக்குகள் கூடுதலாக பெற்று க.சொ.க.கண்ணன் வெற்றி பெற்றார்.
இரு கட்சி வேட்பாளர்களும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தது, இருகட்சியினரிடையே மட்டுமன்றி பொதுமக்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஏற்கெனவே, இந்தத் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் வசம் இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT