Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

திட்டச்சேரியில் இனிப்பு வழங்கி திமுகவினர் கொண்டாட்டம் :

சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியை திட்டச்சேரியில் இனிப்பு வழங்கி திமுகவினர் கொண்டாடினர்.

நாகை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் வெற்றி பெற்றார்.

மேலும், பெரும்பாலான தொகுதிகளில் திமுக வென்று தமிழகத்தில் மீண்டும் ஆட்சிய அமைக்க உள்ளது.

இதையடுத்து, நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம், ப.கொந்தகை கடைத் தெரு, பிரதான சாலை உட்பட பல்வேறு பகுதிகளில் திமுக பொறுப்பாளர் முகம்மது சுல்தான் தலைமையில் நேற்று திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

நிகழ்ச்சியில், அவைத் தலைவர் செய்யது அகமது, பொறுப்புக் குழு உறுப்பினர்கள் முகமது அன்சாரி, ஹமீது ஜெகபர், சந்திரசேகரன், மைதிலி முருகேசன், பி.வி.பி செல்வம், வடக்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் இளஞ்செழியன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பேரூர் செயலாளர் செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்க நிர்வாகி பக்கிரிசாமி உள்ளிட்டோர் திரளாக கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x