Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

5-வது முறையாக வெற்றி பெற்று எம்எல்ஏவான வி.செந்தில் பாலாஜி :

கரூர்: கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி கடந்த 2006-ம் ஆண்டு அதிமுக சார்பில் கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, முதல் முறை எம்எல்ஏவானார். பின்னர், 2011-ம் ஆண்டு கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட்டு, 2-வது முறை எம்எல்ஏ ஆனதுடன், அதிமுக அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் 4 ஆண்டுகளுக்கு மேல் பொறுப்பு வகித்தார். தொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டு அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் செந்தில் பாலாஜி போட்டியிட்டார். வாக்காளர்களுக்கு பண விநியோக புகார் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டு, அதே ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறை எம்எல்ஏவானார். பின்னர், எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட செந்தில்பாலாஜி, திமுகவில் இணைந்து, கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு 4-வது முறை எம்எல்ஏவானார்.

இந்நிலையில், தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில்பாலாஜி வெற்றி பெற்று 5-வது முறை எம்எல்ஏவாகி உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x