Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெயிலுக்கு மத்தியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தக்கலை, குலசேகரம் உட்பட மாவட்டம் முழுவதும் நேற்று காலை பரவலாக கனமழை பெய்தது. இதனால் குளிர்ச்சி நிலவியது.
வறுத்தெடுத்த வெயிலால் தென்னை, ரப்பர், வாழை உள்ளிட்ட மரங்கள் மற்றும் பயிர்கள் தண்ணீரின்றி வாடிய நிலையில் தற்போது பெய்த மழையால் அவற்றுக்கு மறுவாழ்வு கிடைத்தது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஜூன் மாதம் கன்னிப்பூ சாகுபடிக்கான நெல் விதை பாவும் பணிகள் தொடங்கியிருக்கும் சூழலில் அதற்கேற்ற இதமான சூழல் மழையால் கிடைத்துள்ளது.
மலையோரப் பகுதிகளில் பெய்த மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதிகபட்சமாக சிவலோகத்தில் (சிற்றாறு 2) 29 மிமீ., மழை பெய்திருந்தது. சிற்றாறு ஒன்றில் 22, புத்தன்அணையில் 23, பேச்சிப்பாறையில் 22, பெருஞ்சாணியில் 24, சுருளக்கோடில் 20, பாலமோரில் 6, முள்ளங்கினாவிளையில் 14 மி.மீ. மழை பதிவானது.
பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 217 கனஅடி தண்ணீர் வருகிறது. இந்த அணையில் நீர்மட்டம் 41 அடியாகவும், பெருஞ்சாணியில் நீர்மட்டம் 54 அடியாகவும் உயர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT