Published : 03 May 2021 03:15 AM
Last Updated : 03 May 2021 03:15 AM
மேற்குவங்கத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவேன் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 10-ம் தேதி நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, அவரது காலில் காயம் ஏற்பட்டது.
"காரில் ஏற முயன்றபோது நான்கைந்து பேர் தள்ளிவிட்டனர். இதில் எனது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இது திட்டமிட்ட தாக்குதல்" என்று மம்தா குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக திரிணமூல் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் திரிணமூலின் புகாரை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. "கார் கதவு மூடி தற்செயலாக ஏற்பட்ட விபத்தில் மம்தாவின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது" என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
இதன்பிறகு முதல்வர் மம்தா சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே தீவிர பிரச்சாரம் செய்தார். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நேற்று வெளியான போது திரிணமூல் அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து முதல்வர் மம்தா நேற்று சக்கர நாற்காலி உதவியின்றி கொல்கத்தாவில் உள்ள கட்சி தலைமையகத்தில் தானாக நடந்து சென்றார்.
அங்கு நிருபர்களிடம் அவர் கூறும்போது, ‘‘மேற்குவங்க தேர்தலில் பாஜக அநாகரிக அரசியலில் ஈடுபட்டது. தேர்தல் ஆணையம் எங்களுக்கு எதிராக செயல்பட்டது. ஆனால் மக்கள் ஆதரவால் திரிணமூல் வெற்றி பெற்றுள்ளது. இதற்காக மக்களுக்கும் கட்சி தொண்டர் களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். வெற்றி கொண்டாட் டங்களில் ஈடுபடாமல் தொண்டர்கள் வீட்டுக்கு திரும்ப கேட்டுக் கொள்கிறேன். எளிமையாக நடைபெறும் விழாவில் முதல்வராக பதவியேற்பேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT