Published : 03 May 2021 03:15 AM
Last Updated : 03 May 2021 03:15 AM

5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பேரவைக்குள் நுழையும் இடதுசாரிகள் :

தமிழகத்தில் 1952 முதல் நடந்து வந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து பேரவையில் இடம்பெற்றனர்.

2016 பேரவைத் தேர்தலில்இந்நிலை மாறியது. அத்தேர்தலில் தேமுதிக தலைமையில் அமைக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 25 இடங்களில் போட்டியிட்டு ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் இடம்பெறாத அவையாக அமைந்தது.

தற்போதைய தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 இடங்களை திமுக ஒதுக்கியது. இதில், இரு கட்சிகளும் தலா 2 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியுள்ளன. கீழ்வேளூர், கந்தர்வகோட்டையில் மார்க்சிஸ்ட், தளி, திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வென்றுள்ளன. இதன்மூலம் 5 ஆண்டுஇடைவெளிக்கு பிறகு பேரவைக்குள் இடதுசாரி உறுப்பினர்களின் குரல் ஒலிக்க இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x