Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM

கட்சி அலுவலகங்களில் மே தின கொண்டாட்டம் :

அரசியல் கட்சி அலுவலகங்களில் மே தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

உழைப்பாளர் தினம் (மே தினம்) நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை மே தினப்பூங்கா போலவே அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த மே தின நினைவுத் தூணின் மாதிரி வடிவமைப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக தொழிற்சங்க கொடியை கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஏற்றிவைத்து, நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், தேமுதிக தொழிற்சங்க பேரவை செயலாளர் ஜி.காளிராஜன், துணை செயலாளர்கள் பி.வேணுராம், கே.வி.பாலாஜி பங்கேற்றனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில் 136-வது மே தின விழாநிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.மே தினக் கொடியை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஏற்றிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலக் குழுஉறுப்பினர்கள் ஏ.ஆறுமுக நயினார், ஜி.உதயகுமார், கே.சாமுவேல்ராஜ், வெ.ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மே தினத்தை முன்னிட்டு அப்பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர், முகக் கவசம் ஆகியவற்றையும் வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x