Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM
தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலரான தீரஜ் குமாருக்கு கரோனா தொற்று பாதிப்பு உள்ளதால் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். லேசான அறிகுறிகளுடன் மட்டுமே நோய் பாதிப்பு இருப்பதால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு அவர் சிகிச்சை எடுத்து வருகிறார்.
இதையடுத்து, தீரஜ் குமார் கவனித்து வந்த பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறைகளின் பொறுப்புகள், உயர்கல்வித் துறை செயலர் அபூர்வாவுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.
இதற்கான உத்தரவை தமிழக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT