Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM

இரண்டு குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாயும் உயிரிழப்பு :

திருப்பூர்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் பிரபு (35). கூலித் தொழிலாளி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (28). இவர்களுக்குபிருந்தா (7), பிரசந்தா (5) ஆகிய இரு பெண் குழந்தைகள். இந்நிலையில், தம்பதி இடையே கருத்துவேறுபாடு எழுந்ததால் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த 28-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த பிரபுவை குப்புசாமி நாயுடு புரத்துக்கு தமிழ்ச்செல்வியின் குடும்பத்தினர் அழைத்திருந்தனர். இதில் விருப்பம் இல்லாததால், இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தமிழ்ச்செல்வியும் விஷம் அருந்தினார். கடந்த 29-ம் தேதி மகள்கள் இருவரும் உயிரிழந்தனர். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்ச்செல்வி சேர்க்கப்பட்டார். அங்கு கடந்த 30-ம் தேதி தமிழ்ச்செல்வி உயிரிழந்தார். பல்லடம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x