Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM
உடுமலையை அடுத்த தளி காவல் நிலையத்துக்கு உட்பட்ட மொடக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் (29) என்பவரது வீட்டில் 2 பவுன் நகை, வெள்ளி சங்கிலி, அதே ஊரைச் சேர்ந்த சாவித்திரி (45) என்பவரது வீட்டில் ரூ.10,000 ரொக்கம், மடிக்கணினி, புங்கமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கரிச்சியப்பன் (70) என்பவரது வீட்டில் ரொக்கம் ரூ.10,000,அரை பவுன் நகை, ஆறுமுகசாமி(75) என்பவரது வீட்டில் ரூ.70,000 மதிப்பிலான தங்க கம்மல், மூக்குத்தி இரண்டு ஜோடிகள், 3 ஜோடி வெள்ளி சங்கிலி ஆகியவை திருடுபோனது.
இந்த திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய பொள்ளாச்சியை அடுத்த வேட்டைகாரன்புதூரைச் சேர்ந்த அசோக்குமார் (27) தனிப்படையினரால் கைது செய்யப்பட்டார். மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருடு போன தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கம்அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக் கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT