Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM
நாமக்கல்: திருச்செங்கோட்டில் குளியலறையின் கண்ணாடியை உடைத்து வீட்டுக்குள் புகுந்து, 15 பவுன் நகையை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனியைச் சேர்ந்தவர் இளவரசன். இவர் நேற்று முன் தினம் வீட்டை பூட்டி விட்டு, தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, இவரது வீட்டின் குளியலறையின் வெண்டிலேட்டர் கண்ணாடிகளை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். வீட்டில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.8000 ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து திருச்செங்கோடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT