Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் கர்நாடகா மாநில இளைஞர் உயிரிழந்தார்.
நேற்று பகலில் தருமபுரியில் இருந்து பெங்களூரு நோக்கி கார் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. காரை, கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பிரவீன்குமார் (27) என்பவர் ஓட்டிச் சென்றார். வாடிக்கையாளரை இறக்கி விட்டுவிட்டு ஓட்டுநர் மட்டும் தனியாக பெங்களூரு திரும்பிக் கொண்டிருந்தார். காரிமங்கலம் அடுத்த சமத்துவபுரம் பகுதியில் சென்றபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்பகுதியில் எதிர்பாராத விதமாக கார் மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற பிரவீன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த காரிமங்கலம் போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்தும் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT