Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

ரூ.94 கோடியில் கட்டப்பட்டுள்ள - கோயம்பேடு புதிய மேம்பாலம் விரைவில் திறப்பு :

கோயம்பேடு நூறடி சாலையில் ரூ.94 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்பாலம் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் கோயம்பேடு நூறடி சாலை - காளியம்மன் கோயில் சாலை சந்திப்பில் பேருந்துகள் உள்ளிட்ட இதர வாகனங்கள் அதிகளவில் செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்குச் செல்லும் மாநகர பேருந்துகளும் இதற்கு காரணமாக உள்ளன. இங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், நூறடிச் சாலை - காளியம்மன் கோயில் சாலை, புறநகர் பேருந்து நிலைய நுழைவாயில் சந்திப்புகளை இணைத்து, மேம்பாலம் கட்ட,நெடுஞ்சாலைத் துறை முடிவெடுத்தது.

4 ஆண்டுகளாக..

ரூ.94 கோடி செலவில் இதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாகநடைபெற்று வருகின்றன. இருப்பினும், வாகனங்கள் அதிகளவில் சென்று கொண்டிருந்ததால், பணிகள் வேகமாக நடைபெறாமல் இருந்தது. இதற்கிடையே, கரோனா தாக்கத்தால் நிறுத்தப்பட்ட பணிகள், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு வேகமாக நடைபெற்றன.

இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கோயம்பேடு நூறடி சாலையில் இருந்து காளியம்மன் கோயில் சாலை வரையும், காளியம்மன் கோயில் சாலை சந்திப்பில் இருந்து, புறநகர் பேருந்து நிலைய நுழைவாயில் வரையும், புறநகர் பேருந்து நிலைய நுழைவாயிலில் இருந்து மாநில தேர்தல் ஆணையம் வரையும், மூன்று கட்டங்களாக பிரித்து பணிகளை மேற்கொண்டோம். கரோனா பாதிப்பால் பல மாதங்களாக பணிகள் நடக்காமல் இருந்ததால் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு, பணிகள் தொடங்கி வேகமாக நடைபெற்றன. தற்போது, 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதால், எஞ்சியுள்ள பணிகளையும் விரைவில் முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும்’’ என்றனர்.

90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதால், எஞ்சியுள்ள பணிகளையும் விரைவில் முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x