Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

கால்நடை மருத்துவக் கல்லூரியில் : என்எஸ்எஸ் அமைப்பு சார்பில் : கரோனா தடுப்பூசி முகாம் :

கால்நடை மருத்துவக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட (என்எஸ்எஸ்) அமைப்பு சார்பில் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் கரோனா 2-வது அலை மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கு ஏதுவாக கல்லூரிகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பு (என்எஸ்எஸ்) சார்பில் கரோனா தடுப்பூசி முகாம் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இந்த முகாமை தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் க.ந.செல்வகுமார் தொடங்கி வைத்து, தடுப்பூசியும் போட்டுக் கொண்டார். இந்த முகாமில் 55 பேருக்கு கோவாக்சின் 2-ம் தடுப்பூசியும், 58 பேருக்கு கோவிசீல்டு முதல் தடுப்பூசியும் போடப்பட்டது. மேலும், கரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடமும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இத்தகவலை பேராசிரியர் சு.மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x