Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 354 பேருக்கு கரோனா தொற்று :

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 354 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் நேற்றுவரை 19,290 பேருக்கு தொற்று ஏற்பட்டு 17 ஆயிரத்து 137 பேர் சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,030 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளகுறிச்சி மாவட்டத்தில் நேற்று 122 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நேற்றுவரை 12,694 பேருக்கு தொற்று ஏற்பட்டு 11,679பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 904 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒருவர் உயிரிழந்தது உட்பட 111 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 330பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 1,333பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 2 பேர் உட்பட 329பேர் உயிர் இழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x