Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM
புதுச்சேரியில் ரெம்டெசிவர் பயன்பாட்டை ஆய்வு செய்ய மருத்துவ தணிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஆளுநர் அறிவுறுத்தலின்பேரில் தற்போதைய கரோனா பேரிடர் காலத்தில் ரெம்டெசிவர் பயன்பாட்டை ஆய்வு செய்ய மருத்துவ தணிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் சுகாதாரத் துறை இயக்குநர், என்ஆர்எச்எம் இயக்குநர், கரோனா நோடல் அதிகாரி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள கரோனா மைய மருத்துவமனைகள் ரெம்டெசிவர் ஊசியை கொள்முதல் செய்வதற்கு அரசு மருந்தக தலைமை நிர்வாகியிடம் உரிய அனுமதி பெற வேண்டும். அதன் பிறகு, ரெம்டெசிவர் மருந்தை பயன்படுத்தியதற்கான சான்றிதழில் மருத்துவமனைகளின் நோடல் அதிகாரியிடம் கையெழுத்துப் பெற்று, அரசு மருந்தக தலைமை நிர்வாகியிடம் ஒப்படைக்க வேண்டும்.
கரோனா மேலாண்மைக்கு எய்ம்ஸ் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தேவையின்றி கண்மூடித்தனமாக ரெம்டெசிவர் ஊசியை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கக் கூடாது. இதுதொடர்பாக மருத்துவ தணிக்கைக் குழு ஆய்வு செய்து, ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சுகாதாரத் துறைச்செயலாளர் நோட்டீஸ் அனுப்புவார் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT