Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

காரைக்குடி- மேலூர் புறவழிச் சாலை திட்டத்தை - மாற்று வழி தடத்தில் நிறைவேற்ற கோரி வழக்கு :

காரைக்குடி- மேலூர் புறவழிச் சாலைத் திட்டத்தை பாதரக்குடி கிராமத்தில் மாற்று வழித்தடத்தில் நிறைவேற்றக் கோரி தாக்கலான மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

காரைக்குடியைச் சேர்ந்த சுப்ரமணியன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: காரைக்குடி - மேலூர் நான்கு வழிச்சாலையில் புறவழிச் சாலை அமைக்கப்படுகிறது. இந்த திட்டம் பாதரக்குடி கிராமத்தில் கண்மாய், ஆதி திராவிடக் குடியிருப்புகள் என மொத்த ஊரையும் 3 தீவு போல பிரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் நீர் நிலைகள், குடியிருப்புகளுக்கு மத்தியில் செல்லாமல் 3 மாற்று வழித் தடங்கள் கிராம மக்கள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதில் 2 மாற்று வழித்தடத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இருப்பினும் குடியிருப்புகள், நீர் நிலைகள் பாதிக்கும் வகையில் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்துள்ளனர். எனவே கிராமம், குடியிருப்புகள், நீர் நிலைகள் பாதிக்காத வகையில் மாற்று வழித் தடத்தில் புறவழிச் சாலை அமைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், எஸ். ஆனந்தி அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x