Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM
‘கரோனா’ ஊரடங்கு நெருக்கடி யால் வேலை வாய்ப்பு இல்லாமல் வறுமை யில் வாடினாலும் ஓவியர்கள், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுவர்களில் கரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் மற்றும் வாசகங்களை வரைந்து சமூக அக்கறையை வெளிக்காட்டி உள்ளனர்.
பிளக்ஸ் பேனர், சுவரொட்டிகள் வந்த பிறகு ஓவியக் கலைக்கு பெரிய வரவேற்பு இல்லாமல் இருந்தது. அதனால், ஓவியக் கலையைப் பிரதான தொழிலாகக் கொண்ட ஓவியக் கலைஞர்கள் கூட தங்கள் வாழ்வாதாரத்துக்கு வேறு தொழிலை நாடும் நிலை இருந்தது.
சமீபகாலமாக மீண்டும் ஓவியத்துக்கும், அதன் மூலம் உயி ரோட்டமான விஷயங்களுக்கும் மக்களிடம் வரவேற்பு ஏற்படத் தொடங்கி உள்ளது. அதனால் ஓவியக் கலைக்கும், அதன் கலைஞர்களுக்கும் மறுவாழ்வு கிடைத்துள்ளது.
தற்போது கரோனாவால் வாழ்வா தாரம் முடங்கிய நிலையிலும் மதுரை யில் ஓவியக் கலைஞர்கள், தங்கள் சங்கம் மூலம் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா விழிப்புணர்வு வாசகங்கள், ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன் உள்ள சுவரில், கரோனா விழிப்புணர்வு ஓவியங்களை வரைந் துள்ளனர். அந்த ஓவியத்தில் கரோனா தடுப்பூசி போடுவதன் அவசியம், சமூக இடைவெளியைக் குறிப்பிட்டுள்ளது பொதுமக்களைக் கவர்ந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT