Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

பரமக்குடி மருத்துவமனையில் போதிய அளவு ஆக்சிஜன் :

பரமக்குடி அரசு மருத்துவமனை யில் போதிய அளவு ஆக்சிஜன் இருக்கிறது என்று நவாஸ்கனி எம்.பி. தெரிவித்தார்.

பரமக்குடி அரசு மருத்துவ மனையில் நவாஸ்கனி எம்.பி. ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பரமக்குடி அரசு மருத்துவ மனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு படுக்கை வசதி, பரிசோதனை விவரம், போதுமான மருத்துவர் கள், தடுப்பூசி, ஆக்சிஜன் இருப்பு குறித்து தலைமை மருத்துவ அதிகாரி நாகநாதனிடம் கேட்டறிந்தேன். ஆக்சிஜன் வசதி போதுமானதாக இருக்கிறது.

பரமக்குடி ஐந்துமுனை சாலையில் பழைய பெண்கள் அரசு மருத்துவமனைக்குப் புதிய கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்யப்படும். பரமக்குடி தபால் நிலையத்துக்கு சொந்தக் கட்டிடம் கட்டப்படும். பரமக்குடி ரயில் நிலையம் தரம் உயர்த்தப்படும். கமுதக்குடி கிராம மக்களுக்கு ரயில்வே சுரங்கப் பாதை அமைக்க ரயில்வே அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்துப் பேசி யுள்ளேன். இப்பிரச்சினை விரை வில் சரி செய்யப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x